இந்தியா

வெறிச்சோடிய சென்னை… சொந்த ஊருக்கு செல்ல கைகொடுக்கும் அரசு பேருந்துகள்!

Published

on

வெறிச்சோடிய சென்னை… சொந்த ஊருக்கு செல்ல கைகொடுக்கும் அரசு பேருந்துகள்!

பொங்கல் திருநாளை கொண்டாட தமிழ்நாடு அரசின் சிறப்பு பேருந்துகள் மூலம் இதுவரை 6.4 லட்சம் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும்.

Advertisement

அதன்படி இந்தாண்டு ஒரு வாரத்திற்கும் மேலாக பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது.

அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கடந்த மூன்று நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது.

அதன்படி நேற்று (ஜனவரி 12) தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,858 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதில் 2,17,250 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

Advertisement

கடந்த 11ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் மூலம் 2,17,250 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களிலும் ஒட்டுமொத்தமாக 11,463 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், அதன்மூலம் 6,40,465 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பலரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளதால், வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று, சென்னை மாநகரின் பல சாலைகளும் வெறிச்சோடியே காணப்படுகிறது. மேலும் பல முக்கிய இடங்களில் எப்போதும் காணப்படும் போக்குவரத்து நெருக்கடியும் வெகுவாக குறைந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version