இலங்கை

அம்பாறையில் மர்மபொருளுடன் கைதான சந்தேக நபர்… தொடரும் விசாரணை

Published

on

அம்பாறையில் மர்மபொருளுடன் கைதான சந்தேக நபர்… தொடரும் விசாரணை

சம்மாந்துறை பகுதியில் உள்ள வீட்டில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisement

அம்பாறை – சம்மாந்துறை, மல்வத்தை திருவள்ளுவர்புரம் பகுதியில் விற்பனை செய்வதற்காக அதிகளவான கசிப்பு கலன்களுடன் நேற்றையதினம் (13-01-2025) 45 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது அவர் வசமிருந்து 15000 மில்லி லீட்டர் கசிப்பினை சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றி இருந்தனர்.

கைதான சந்தேக நபர் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சம்மாந்துறை ஊழல் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version