இலங்கை

கல்ஓயா கரை உடைப்பெடுக்கும் அபாயம்

Published

on

கல்ஓயா கரை உடைப்பெடுக்கும் அபாயம்

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, அம்பாறையின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர பகுதிகளில் உள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் சேனாநாயக்கபுர பகுதியில் கல்லோயா ஆற்றின் கரைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. ​​உடைப்பு ஏற்படும் அபாயம் மட்டுமே உள்ளது. ஆனால் உடைப்பெடுக்கவில்லை

ஆனால் அது உடைந்தால் அம்பாறை பிரதேச செயலாளர் பிரிவின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர கிராம அலுவலர் பிரிவுகளின் சுதுவெல்ல பகுதியில் வசிக்கும் ஏராளமான குடும்பங்கள் வெள்ள சூழ்நிலையால் பாதிக்கப்படலாம். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version