இலங்கை

யாழில் பட்டத்திருவிழாவில் பறந்த ஜனாதிபதி அனுரகுமார!

Published

on

யாழில் பட்டத்திருவிழாவில் பறந்த ஜனாதிபதி அனுரகுமார!

  தமிழர் திருநாளாம் உழவர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் , “வல்வை பட்டத் திருவிழா – 2025” வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்றைய தினம் (14) நடைபெற்றது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கம்லந்துகொண்டிருந்தார்.

Advertisement

விழாவில் , சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமாரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பட்ட போட்டியில் சுமார் 130 பட்டங்களை அதனை வடிவமைத்தவர்கள் விண்ணில் பறக்க விட்டிருந்தனர்.

அவற்றில் “உயிர்த்தெழும் ராகன்” பட்டம் முதலாமிடத்தையும், “மின் பிறப்பாக்கி பட்டம்” இரண்டாம் இடத்தினையும் , “ஹெலிகாப்டர் மூலம் தூக்கி செல்லும் திரையரங்கு” பட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

Advertisement

அதேவேளை பறக்கவிடப்பட்ட பட்டங்களில் ஜனாதிபதி அனுரவின் புகைப்படத்துடன் தூய்மையான எதிர்காலம் எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பட்டமும் பறக்கவிடப்பட்டிருந்தது.

கிளீன் சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திட்டம் ஊடாக இலங்கையில் பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படு வருகின்றது.

அதேவேளை இந்த பட்டத்திருவிழாவில் நடிகரும், அரசியல்வாதியுமான விஜய் இன் படம் பொறித்த பட்டமும் பறக்கவிடப்பட்டிருந்த  நிலையில்  பருமளவிலான மக்களும் பட்டத்திருவிழாவில் கலந்துகொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version