இலங்கை

பாடசாலைகளுக்கு 60 ஸ்மார்ட் வகுப்பறை நிர்மாணத்திற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

Published

on

பாடசாலைகளுக்கு 60 ஸ்மார்ட் வகுப்பறை நிர்மாணத்திற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (16) கைச்சாத்திடப்பட்டது.

ஒப்பந்தத்தில் பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகிர்த்தி மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சதோஷ் ஜா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Advertisement

இந்நாட்டில் உள்ள பெருந்தோட்ட சமூகங்களின் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும் நடவடிக்கையாக நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள தோட்டப் பாடசாலைகளுக்கு இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக இந்திய அரசாங்கம் 508 மில்லியன் ரூபாவை தாராளமாக நிதியுதவியாக வழங்கியதுடன், இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளுக்காக இலங்கை அரசாங்கமும் 115 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version