இலங்கை

மாத்தறையில் துப்பாக்கிகளுடன் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

Published

on

மாத்தறையில் துப்பாக்கிகளுடன் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

மாத்தறை – வெவஹமந்துவ பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி உட்பட 2 துப்பாக்கிகள் மற்றும் 60க்கும் மேற்பட்ட தோட்டாக்களுடன் இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மாத்தறை உப பிரிவு அதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்றையதினம் (17-01-2025) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

குறித்த நடவடிக்கையின் போது, டி-56 துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 60 தோட்டாக்கள், இரண்டு டி-56 மகசீன்கள், ‘கல்கடாஸ்’ நாட்டுத் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34 மற்றும் 38 வயதுடைய மாத்தறை, வெவஹமந்துவ பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. 

ஜனவரி 12ஆம் திகதி மாத்தறை தெவுந்தர பகுதியில் வர்த்தகர் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version