இலங்கை

179 பேரை பலிகொண்ட விமான விபத்திற்கான காரணம் வெளியானது!

Published

on

179 பேரை பலிகொண்ட விமான விபத்திற்கான காரணம் வெளியானது!

தென்கொரிய விமான விபத்திற்கு பறவை மோதியமையே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 29-12-2024 ஆம் திகதி பாங்காங்கிலிருந்து 175 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 181 பேரை ஏற்றிக் கொண்டு, தென்கொரியா புறப்பட்ட விமானம் ஒன்றே முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

Advertisement

இந்த விபத்தில் சிக்கி மொத்தம் 179 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், இந்த விபத்துக்கு பறவை மோதியதே காரணம் என்று உறுதி செய்யும் வகையில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்டு, விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

விபத்து நடப்பதற்கு 4 நிமிடங்களுக்கு முன்பு, விமானத்தின் பிரதான இயந்திரப் பகுதியில் பறவை ஒன்று மோதியதாகவும், இதனால், அவசரகால எச்சரிக்கையை விமானிகள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதை உறுதி செய்யும் விதமாக, விபத்துக்குள்ளான விமானத்தின் இயந்திரத்தில் பறவையின் இறகு மற்றும் இரத்தக்கறை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version