உலகம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை : ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

Published

on

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை : ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

கனடாவில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் என்ன செய்வது என்பது தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

கனடா பிரதமர் ஆக இருந்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. கட்சிக்குள் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்த அவர், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் நீடிப்பேன் என தெரிவித்திருந்தார். கட்சி விதிப்படி, தலைவராக இருப்பவரே பிரதமர் ஆக பதவி ஏற்கமுடியும். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களைச் சந்தித்த போது,

Advertisement

”நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு எடுத்துள்ளேன். அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் அடுத்து என்ன செய்வது என முடிவு செய்யவில்லை. அதற்கு நேரமும் இல்லை. தற்போது கனடா மக்கள் அளித்த பணிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறேன்.” என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version