இலங்கை

நடுரோட்டில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி வாக்குவாதம்

Published

on

நடுரோட்டில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி வாக்குவாதம்

 இலங்கை  நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Advertisement

இதன் காரணமாக, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், அப்போது பொலிஸ் அதிகாரிகள் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.

 எனினும் பொலிஸாரிடம்    ஆவணங்களை வழங்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நடந்து கொண்டதாக தெரியவருகிறது.

இன்றையதினம்  நாடாளௌம்ன்றம் கூடவுள்ள நிலையில்  அர்ச்சுனா எம்.பி இன்று (21) காலை நாடாளுமன்றத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த சம்பவத்தை அவர் எதிர்கொண்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version