இலங்கை

இலங்கை கடவுச்சீட்டு தொடர்பிலான அறிவித்தல்

Published

on

இலங்கை கடவுச்சீட்டு தொடர்பிலான அறிவித்தல்

  இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழி முறைமையில் ஒரு திகதியை முன்பதிவு செய்யலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

அதன்படி குறித்த திகதியில் ஒருநாள் கடவுச்சீட்டைப் பெற முடியும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Advertisement

இன்று (23) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இன்றைய தினம் யாரேனும் ஒருவர் திகதியை முன்பதிவு செய்தால், அவர்களுக்கு ஜூன் 27 ஆம் திகதி கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்தார் .

இணையவழி முறைமைக்கான திகதி, 05 மாதங்களுக்கு முன்பே ஒரு திகதியில் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் கூறினார்.

Advertisement

அதோடு ,ஒதுக்கப்பட்ட திகதிக்கு முன்னர் அவசர தேவையுடையவர்களுக்கு , அவர்களுடைய தேவையைக் கருதி கடவுசீட்டுக்களை பெறுவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version