உலகம்

குதிரையை வெந்நீரில் குளிக்க வைத்ததற்காக உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை!

Published

on

குதிரையை வெந்நீரில் குளிக்க வைத்ததற்காக உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 23/01/2025 | Edited on 23/01/2025

போலந்து நாட்டில் குதிரையில் வெந்நீரில் குளிக்க வைத்தற்காக குதிரையின் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போலந்தில் உள்ள மாகோவ் மாசோவிக்கி நகரத்தில் உள்ள கார் கழுவும் இடத்திற்கு, குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டு ஒரு நபர் வந்துள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த உயர் அழுத்த குழாயைப் பயன்படுத்தி, வெந்நீரைக் கொண்டு அந்த குதிரையை உரிமையாளர் குளிக்க வைத்தார். 

Advertisement

வெந்நீரின் வெப்பநிலையை தாங்க முடியாத அந்த குதிரை, அங்கும் இங்கும் துள்ளி குதித்தது. மேலும், அங்கு இருந்த சுவரை இடித்தது. வெப்பத்தை தாங்க முடியாத அந்த குதிரை ஒரு கட்டத்தில் சரிந்து கீழே விழுந்தது. இது தொடர்பான வீடியோ, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அந்நாட்டு காவல்துறை குதிரை உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தியது. 

குதிரை கொடுமைப்படுத்தியதால் அந்த நபர் மீது விலங்கு நல வாரியம் கடுமையான கண்டனம் தெரிவித்தது. மேலும், பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பான நடந்த வழக்கு விசாரணையில், அந்த நபருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • “மதுரை மக்கள் முன் ஒன்றிய அரசு அடிபணிந்துள்ளது” – சு.வெஙக்டேசன் எம்.பி.

  • காவல்துறை உயர் அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்!

  • குதிரையை வெந்நீரில் குளிக்க வைத்ததற்காக உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை!

  • “அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து” – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  • “ஒவ்வொரு தமிழரும் பெருமைகொள்ளும் உணர்ச்சிமிகு தருணமிது” – கனிமொழி

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version