உலகம்

தாய்லாந்தில் ஒரே பாலினத் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்!

Published

on

தாய்லாந்தில் ஒரே பாலினத் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்!

ஒரே பாலின (LGBTQ+)  திருமணங்களுக்கு தாய்லாந்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பாலின தம்பதிகளுக்கு இருக்கும் அதே உரிமைகளை அவர்களுக்கு வழங்கும் சட்டம் இன்றுமுதல் (23) சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

Advertisement

ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் தென்கிழக்கு ஆசிய நாடாகிய தாய்லாந்தில் நூற்றுக்கணக்கான தம்பதிகள் சட்டம் அமுலுக்கு வந்த முதல் நாளிலேயே திருமணம் செய்து கொண்டனர்.

தாய்லாந்து வரலாற்று சிறப்புமிக்க திருமண சமத்துவ சட்டமூலத்தை கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

இது 2025 ஜனவரி 23 முதல் நடைமுறைக்கு வருகிறது.

Advertisement

தாய்வான் மற்றும் நேபாளத்திற்குப் பின்னர், ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய தெற்காசிய நாடுகளில் முதல் இடத்தையும், ஆசியாவில் மூன்றாவது இடத்தையும் பிடித்த நாடாக இதன் மூலம் தாய்லாந்து ஆனது.

தாய்லாந்தில் சம திருமணச் சட்டங்களை இயற்ற வேண்டுமென்று LGBTQ குழுக்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தின் ஒரு தசாப்த கால போராட்டத்துக்கு மத்தியில் இந்த சட்டம் வந்துள்ளது.

சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாக கடந்த வாரத்துக்க முன்னர், ​​தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, உயிரியல் பாலினத்திற்கு அப்பாற்பட்ட பாலின அடையாள அங்கீகாரத்தின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

Advertisement

2001 ஆம் ஆண்டில் ஒரே பாலின தொழிற்சங்கங்களை அனுமதித்த முதல் நாடு நெதர்லாந்து ஆகும். அதன் பிறகு பல ஆண்டுகளில் உலகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட நாடுகள் இதைப் பின்பற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version