இலங்கை
நாகர்கோவில் பகுதியில் வீடொன்று தீக்கிரை!
நாகர்கோவில் பகுதியில் வீடொன்று தீக்கிரை!
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் வீடொன்று நேற்று அதிகாலை பகுதியளவில் தீக்கிரையாகியுள்ளது.
அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பற்றி எரிவதை அவதானித்த வீட்டின் உரிமையாளரின் முயற்சியின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தீவிபத்துக்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை