இலங்கை

யாழில் கோர விபத்து ; பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் இரு இளைஞர்கள்

Published

on

யாழில் கோர விபத்து ; பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் இரு இளைஞர்கள்

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகின்றனர்.

இந்த சம்பவம் இன்று (22) மாலை இடம் பெற்றுள்ளது.

Advertisement

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் நடந்து சென்றவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கை, கால், முறிவடைந்த நிலையிலும், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில்,

இருவரும் வீதியால் சென்றவர்களினால் மீட்கப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

குறித்த சம்பவத்தில் அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த மாடுகளைக் கூட்டிச் சென்ற 32 வயதான இளைஞனும், தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நெல்லியடி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரான மோட்டார் சைக்கிள் செலுத்துனருமே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் செலுத்தினரின் அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இரு இளைஞர்களும் தற்போது உயிருக்கு போராடி வருவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version