இலங்கை

யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு

Published

on

யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு

  யாழ்ப்பாணம் – றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் (23)இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செட்டிவளவு, இணுவில் மேற்கு பகுதியை சேர்ந்த 65 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

Advertisement

குறித்த நபர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவேளை கீழே மயங்கி விழுந்துள்ளார்.

இதன்போது வீதியால் பயணித்தவர்கள் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Advertisement

மாரடைப்பு காரணமாக குறித்த மரணம் சம்பத்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version