சினிமா

இளம் இயக்குநரால் மிரண்டுபோன தனுஷ்.. இப்படியொரு சம்பவம் நடந்ததா

Published

on

இளம் இயக்குநரால் மிரண்டுபோன தனுஷ்.. இப்படியொரு சம்பவம் நடந்ததா

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த தரமான டாப் 10 திரைப்படங்களில் ஒன்று லப்பர் பந்து. கெத்து தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா, சுவாசிகா என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.மக்கள் மத்தியில் இப்படம் மாபெரும் அளவில் கொண்டாடப்பட்டது. முதல் படத்திலேயே வெற்றியை பதிவு செய்தார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பல்வேறு இடங்களில் இருந்து வாய்ப்பு கிடைத்துள்ளது.அதில் ஒரு வாய்ப்பு தான் நடிகர் தனுஷை வைத்து படம் இயக்குவது. தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்துக்கொண்டு இருக்கிறார்.இப்படத்தை முடித்த கையோடு தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்படம் கைவிடப்பட்டுவிட்டது என பேசப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.சமீபத்தில் இயக்குனர் இப்படத்தின் கதையை தனுஷிடம் கூறினாராம். கதையை கேட்ட நடிகர் தனுஷ் மிரண்டு போய்விட்டாராம். உடனடியாக தயாரிப்பாளருக்கு போன் கால் செய்து கதை பிரமாதமாக இருக்கிறது நான் மிரண்டு போய்விட்டேன் என கூறியுள்ளாராம். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version