உலகம்

அமெரிக்கா செல்லும் மோடி ; டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு!

Published

on

அமெரிக்கா செல்லும் மோடி ; டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை செய்தியாளர்களுடன் பேசும்போது டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement

செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசியதாவது,

”நீண்ட நேரம் நரேந்திர மோடியுடன் உரையாடினேன். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் வெள்ளை மாளிகைக்கு வருகை தரவுள்ளார். நாங்கள் இந்தியாவுடன் நல்ல உறவுடன் இருக்கின்றோம்” என்றார்.

பிரதமர் மோடியுன் தொலைபேசியில் பேசியது குறித்து அமெரிக்க ஜனாதிபதியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கே இவ்வாறு பதிலளித்தார்.

Advertisement

டிரம்ப்புடன் மோடி தொலைபேசியில்  நேற்று திங்கட்கிழமை பேசியுள்ளார். இதுதொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க ஜனாாிபதியாக இரண்டாவது முறை பதவியேற்றதற்கு டிரம்ப்புக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய நம்பகமான கூட்டுறவைத் தொடர வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளோம். இருநாட்டு மக்களின் நல்வாழ்வு, உலக அமைதி, வளமை மற்றும் பாதுகாப்புக்கு இருவரும் இணைந்து பணியாற்றுவோம்’ என்றாா்.

பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தொழில்நுட்பம், வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசியுள்ளனர். விரைவில் சந்திக்கவும் அவா்கள் தீா்மானித்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version