இந்தியா

உலகின் மிக உயரமான பாலத்தில் சென்ற ‘வந்தே பாரத்’ ரயில்!

Published

on

உலகின் மிக உயரமான பாலத்தில் சென்ற ‘வந்தே பாரத்’ ரயில்!

உலகின் உயரமான ரயில்வே பாலத்தில், வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் – ஸ்ரீநகர் – பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில், ஒற்றை வளைவு ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட 115 அடி அதிக உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீநகர் வந்த வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் குளிர்சியான சூழலுக்கு ஏற்ப, இந்த வந்தே பாரத் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 66 வழித்தடங்களில் 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version