இலங்கை

துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் மீனவர்களுடைய ஆக்ரோஷமே! கடற்படை விளக்கம்

Published

on

துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் மீனவர்களுடைய ஆக்ரோஷமே! கடற்படை விளக்கம்

பருத்தித்துறைக் கடற்பரப்பில் ஸ்ரீலங்கா கடற்படையால் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில், ‘கைது நடவடிக்கையை முன்னெடுக்கும்போது இந்திய மீனவர்கள் மூர்க்கமாக நடந்துகொண்டதாலேயே துப்பாக்கி இயங்கியது’ என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் உள்ளதாவது:
வடக்குக் கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டபோது, கடற்படையின் உத்தரவுக்கு மீனவர்கள் கீழ்ப்படியவில்லை. இதனால் குறித்த படகில் சில கடற்படையினர் இறங்கியுள்ளனர். தமது படகுக்குள் கடற்படையினர் ஏறுவதை தடுப்பதற்காக, மீனவர்கள் கடும் ஆக்ரோஷமாகவும் ஒழுக்கமின்றியும் நடந்து கொண்டனர்.
கடற்படையினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், கடற்படை வீரர் ஒருவரிமிருந்த துப்பாக்கியையும் மீனவர்கள் பறிக்க முயற்சித்துள்ளனர். இதன்போது அந்த துப்பாக்கி இயங்கியதாலேயே இரு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் கடற்படையினரால் காயமடைந்த மீனவர்கள் இருவருக்கும் முதலுதவி வழங்கப்பட்டு அவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோத மீன்படி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், வடக்கு கடல் பிராந்தியத்தில் கடல் வளத்தின் பாதுகாப்புக்கும், வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கை கடற்படை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது – என்றுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version