இந்தியா
மஹா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் 40 ஆக அதிகரிப்பு!
மஹா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் 40 ஆக அதிகரிப்பு!
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் இடம்பெறும் மஹா கும்பமேளா வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் புனித நதி நீரில் நீராட கூடியிருந்தபோது, அதிகாலையில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 உடல்கள் மோகு பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றின் பிணவறைக்கு கொண்டு வரப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், உயிரிழந்தவர்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகளை அரசாங்கம் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
அதிக சன நெரிசல் காரணமாக குறித்த பகுதிக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் செல்வதற்கு திட்டமிட்டிருந்த பல விசேட தொடருந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.