உலகம்

 டிக்டாக்கில் வீடியோ போட்ட மகள்; தந்தையின் வெறிச் செயல்!

Published

on

 டிக்டாக்கில் வீடியோ போட்ட மகள்; தந்தையின் வெறிச் செயல்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 31/01/2025 | Edited on 31/01/2025

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அமெரிக்காவில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமி அமெரிக்காவில் இருந்து தனது குடும்பத்தினருடன் கடந்த 15ஆம் தேதி பாகிஸ்தான் வந்தார். 

டிக்டாக் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வீடியோ போடும் பழக்கம் கொண்ட சிறுமியை, அவரது தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், தந்தையின் எச்சரிக்கையை மீறி சிறுமி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டார். இதில் ஆத்திரமடைந்த தந்தையும், சிறுமியின் மாமாவும் சேர்ந்து சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். 

Advertisement

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாகிஸ்தான் போலீசார், சிறுமியின் தந்தையையும் உறவினரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நீதிபதியின் உத்தரவுபடி அவர்கள் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். டிக்டாக்கில் வீடியோ போட்டதால் மகளை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • “உலகிற்கு இந்தியா வழி காட்டுகிறது” – குடியரசுத் தலைவர் பெருமிதம்!

  • “தமிழக அரசு நினைத்தால் 15 நிமிடங்களில் நிறைவேற்றி விட முடியும்” – ராமதாஸ்

  • வரதட்சணைச் சட்டத்தை மாற்றக் கோரி கடிதம்; விரக்தியில் புகைப்பட கலைஞரின் விபரீத முடிவு!

  • “அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்” – குடியரசுத் தலைவர்!

  • “குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், கடும் நடவடிக்கையை உறுதி செய்க’ – கனிமொழி

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version