இந்தியா

விமானத்தின் அவசரகால கதவை திறந்த பயணியால் பரபரப்பு!

Published

on

விமானத்தின் அவசரகால கதவை திறந்த பயணியால் பரபரப்பு!

ராஜஸ்தானில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணி ஒருவர், அவசரகாலக் கதவை திறக்க முயற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து இண்டிகோ விமானம் பெங்களூர் செல்லத்ணதயாராக இருந்தது.

அனைத்துப் பயணிகளும் விமானத்தில் ஏறினர். விமானக் குழுவினர், விமானப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். ஆனால் திடீரென ஒரு பயணி, அவசரகால வெளியேறும் கதவைத் திறந்தார். இவரது செயலால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

விமானிகள் மற்றும் விமானக் குழுவினர் நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். குறிப்பிட்ட அந்த பயணி கைது செய்யப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவசரகால கதவு திறக்கப்பட்டதும், விமானிக்கு நேரடிச் செய்தி அனுப்பப்பட்டது. பின்னர், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியை விமானத்தில் இருந்து வெளியேற்றினர்.

ஜோத்பூரில் உள்ள விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகள் பயணியிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் விமானம் புறப்பட 20 நிமிட தாமதம் ஏற்பட்டதால் விமானத்தில் பரபரப்பு காணப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version