இந்தியா

2025 Budget in Tamil Live Updates: வரி குறைப்பு வழங்குவாரா நிர்மலா? மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

Published

on

2025 Budget in Tamil Live Updates: வரி குறைப்பு வழங்குவாரா நிர்மலா? மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

Union Budget 2025-26 Announcements Live Updates in Tamil: 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இதுவாகும்.மத்தியில் பா.ஜ.க 3-வது முறையாக ஆட்சியமைத்தபின் தாக்கல் செய்யப்படும் 2-வது பட்ஜெட் இதுவாகும். முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்த பா.ஜ.க கடந்த ஜுலை மாதம் 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தது. தற்போது, 2-வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.ஆங்கிலத்தில் படிக்கவும்: Union Budget 2025 LIVE Updatesபட்ஜெட்டுக்கு முன்னதாக, காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி பேசுகையில், “பட்ஜெட் என்பது மிக எளிமையாக ஒரு கணக்கு அறிக்கை. அரசாங்கம் எவ்வளவு செலவு செய்தது, எவ்வளவு சம்பாதித்தது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உபரியாக இருந்தாலும் பற்றாக்குறையாக இருந்தாலும் சரி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பல ஆண்டுகளாக, நிதியமைச்சர் பிரமாண்டமாக பேசுவதற்கும் தாய்மை மற்றும் ஆப்பிள் பை பற்றி பேசுவதற்கும் இது ஒரு வருடத்திற்கு ஒரு முறை மேடையாகிவிட்டது. அதனுடன் சேர்ந்து, தொலைக்காட்சி சேனல்கள் அதை ஒரு காட்சியாக மாற்றியுள்ளன, முதன்மையாக இது வருவாய் மற்றும் டி.ஆர்.பி-யை உயர்த்துவதற்கான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால், அதன் முடிவில், ஒவ்வொரு முன்னேறிய பொருளாதாரம் போல, பட்ஜெட் ஒரு நிகழ்வு அல்ல, ஏனெனில் அது வெறும் கணக்கு மற்றும் செலவின அறிக்கை மட்டுமே…” என்று அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த நாட்டின் பொருளாதாரம் பராமரிக்கப்படத் தொடங்கியதிலிருந்து, மக்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆதரவான பட்ஜெட்டுகளை வழங்கியுள்ளோம். இந்த ஆண்டும் அப்படித்தான் இருக்கும்” என்று அவர் கூறினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்தியாவின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை உயர்வுடன் தொடங்கி இருக்கிறது. காலை 9:15 மணி நிலவரப்படி நிஃப்டி 50 0.13 சதவீதம் உயர்ந்து 23,541.3 புள்ளிகளாக இருந்தது, அதே நேரத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 0.18% அதிகரித்து 77,637.01 ஆக இருந்தது. கடன் மற்றும் அந்நிய செலாவணி சந்தைகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் முர்முவுடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார். நிதியமைச்சருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் குடியரசுத் தலைவர் முர்மு.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version