இந்தியா

எல்லைக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகள்; கண்ணிவெடியில் சிக்கி உயிரிழப்பு

Published

on

எல்லைக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகள்; கண்ணிவெடியில் சிக்கி உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் எல்லையான பூஞ்ச் ​​மாவட்டத்தின் பட்டல் செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் வெள்ளிக்கிழமை நடந்த கண்ணிவெடி வெடிப்பில் குறைந்தது 5 பாகிஸ்தான் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.ஆங்கிலத்தில் படிக்க: 5 Pakistani militants trying to cross LoC killed in landmine blastபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியப் பகுதிக்குக் கடந்து சென்றதாகக் கூறப்படும் தீவிரவாதிகளில் ஒருவர், இந்தியப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை தற்செயலாக மிதித்ததால் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.இதனால் வெடிப்பு ஏற்பட்டு ஊடுருவல்காரர்கள் உயிரிழந்தனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், தீவிரவாதிகள் ஒரு ஐ.இ.டி-யை வைத்திருந்ததாகவும், அதுவும் வெடித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.மேற்படி விவரங்களுக்காக காத்திருக்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.ஊடுருவல் எதிர்ப்புத் தடுப்பு அமைப்பின் ஒரு பகுதியாக, இந்தியப் பகுதியில் உள்ள முன்பகுதிகளில் பல்வேறு இடங்களில், குறிப்பாக அறியப்பட்ட ஊடுருவல் பாதைகளில் கண்ணிவெடிகள் உள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கண்ணிவெடிகள் சில நேரங்களில் மழையால் அடித்துச் செல்லப்படுகின்றன என்று ஒரு அதிகாரி விளக்கினார்.ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே ஒரு கண்ணிவெடி வெடிப்பில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார். கிருஷ்ணா காட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் அவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version