இந்தியா

மகாராஷ்டிராவில் 9.4 கோடி வயது வந்தோர் இருக்கும் போது, 9.7 கோடி பேர் வாக்களித்தது எப்படி? ராகுல் காந்தி கேள்வி

Published

on

மகாராஷ்டிராவில் 9.4 கோடி வயது வந்தோர் இருக்கும் போது, 9.7 கோடி பேர் வாக்களித்தது எப்படி? ராகுல் காந்தி கேள்வி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தும் போது, மாநிலத்தில் 9.4 கோடி வயது வந்தோர் வசிக்கும் போது 9.7 கோடி மக்கள் எவ்வாறு வாக்களித்தனர் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினார்.ஆங்கிலத்தில் படிக்க: Rahul Gandhi voices concerns over Maharashtra polls results: ‘State’s adult population 9.54 crore… 9.7 crore casted vote. How is that possible?’”நாங்கள் தேர்தல் ஆணையம் மீது எந்த குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை. இறுதி வாக்காளர் பட்டியல் மட்டுமே எங்களுக்கு வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு. அரசாங்க தரவுகளின்படி, மகாராஷ்டிராவில் வாக்களிக்க தகுதியான மக்கள் தொகை 9.54 கோடி. இருப்பினும், 9.7 கோடி பேர் சட்டசபை தேர்தலில் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தியுள்ளனர். அது எப்படி சாத்தியம்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.”2019ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கும், 2024ல் நடந்த லோக்சபா தேர்தலுக்கும் இடையே, 32 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில், 2024ல் நடந்த லோக்சபா தேர்தலுக்கும், அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கும் இடையே, 39 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இது வெறும் ஐந்து மாதங்களில் நடந்துள்ளது. எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் நான் இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசினேன், ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை,” என்று ராகுல் காந்தி கூறினார்.இந்த அறிக்கைகளுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி கோரிய அனைத்து உண்மைகளையும் எழுத்துப்பூர்வமாக வழங்குவதாகக் கூறியது. “நிச்சயமாக வாக்காளர்கள் முதன்மையானவர்கள் என்றாலும், தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளையும் முன்னுரிமைப் பங்குதாரர்களாகக் கருதுகிறது, மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வரும் கருத்துகள், ஆலோசனைகள், கேள்விகளை ஆழமாக மதிக்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முழு உண்மை மற்றும் நடைமுறை விபரங்களுடன் தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கும்,” என்று சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.சமீபத்தில், தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் – முதலாவதாக, லோக்சபா மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் ஐந்து மாதங்களில் 70 லட்சம் வாக்காளர்கள் மகாராஷ்டிர வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர், இரண்டாவதாக, ஷீரடியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முகவரியில் இருந்து 7,000 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டனர்.நவம்பர் 29 அன்று, மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆறு நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது, மேலும் சில பிரதிநிதிகள் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 13% அதிகரிப்பு “அதிர்ச்சியூட்டுகிறது” என்று அழைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்புவதற்காக தேர்தல் ஆணையத்தை சந்தித்தனர். 39 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான “மூல தரவுகளை” வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் பிரதிநிதிகள் கோரினர்.இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம் டிசம்பர் 24 அன்று 48,81,620 சேர்த்தல்களும், 8,00,391 நீக்கங்களும் நடந்துள்ளதாகவும், இது லோக்சபா தேர்தலில் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கு இடையில் மாநிலத்தில் 40,81,229 வாக்காளர்களை சேர்த்ததற்கு வழிவகுத்ததாகவும் பதில் எழுதியது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, 18 வயதை அடையும் புதிய வாக்காளர்களுக்கு தற்போது நான்கு தகுதித் தேதிகள் உள்ளன: ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1. 18-19 வயதுக்குட்பட்ட 8,72,094 வாக்காளர்களும், 20-29 வயதுக்குட்பட்ட 17,74,514 வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது“இவ்வாறு, இந்த காலகட்டத்தில் 40,81,229 வாக்காளர்களில் 18-29 வயதுக்கு உட்பட்ட 26,46,608 இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது நமது ஜனநாயகத்தின் எதிர்காலமான இளைஞர்களின் பங்கேற்புக்கான வரவேற்கத்தக்க போக்காகும். எனவே, மகாராஷ்டிரா போன்ற ஒரு பெரிய மாநிலத்தில் இந்த காலகட்டத்தில் செய்யப்பட்ட சேர்த்தல் அசாதாரணமான போக்கு எதுவும் இல்லை,” என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version