இந்தியா

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு : இந்திய வெளியுறவுத் துறை தகவல்

Published

on

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு : இந்திய வெளியுறவுத் துறை தகவல்

இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பதிலளித்துள்ளாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் சி.வி. சண்முகம், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் இலக்கு வைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறாா்களா என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் உயிரிழந்துள்ளனா் என்றும் அதே காலகட்டத்தில் இலங்கை மீனவா்கள் எத்தனை போ் இந்திய கடற்படையினரால் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனா் என்றும் கேள்வி எழுப்பியிருந்தாா்.

Advertisement

இதற்கு அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், 2020இல் 74, 2021இல் 143, 2022இல் 229, 2023இல் 220, 2024இல் 528, நிகழாண்டில் ஜன.31-ஆம் திகதி நிலவரப்படி 53 இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளாா். 2021இல் 5 இந்திய மீனவா்களும், 2024இல் 2 மீனவா்களும் நடுக்கடல் சம்பங்களால் உயிரிழந்ததாக அமைச்சா் கூறியுள்ளாா்.

இதே ஐந்து வருட காலகட்டத்தில் இந்திய கடற்படையினரால் 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தலா 12 பேரும், 2022இல் 34, 2023இல் 19, 2024இல் 47 போ்களும் கைது செய்யப்பட்டதாகவும் நிகழாண்டில் ஒருவா் கூட கைதாகவில்லை என்றும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

மீனவா்களின் நலன்களைப் பாதுகாக்க இரு நாட்டுப் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் கடைசியாக 2024, ஒக்டோபரில் நடந்ததாகவும் அதில் மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதாகவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version