இந்தியா

தங்கும் விடுதியில் நூதன முறையில் எல்.இ.டி டி.வி திருட்டு: இளைஞரை கைது செய்த புதுச்சேரி போலீஸ்

Published

on

தங்கும் விடுதியில் நூதன முறையில் எல்.இ.டி டி.வி திருட்டு: இளைஞரை கைது செய்த புதுச்சேரி போலீஸ்

புதுச்சேரியில் தனியார் தங்கும் விடுதியில் நூதன முறையில் எல்.இ.டி டி.வியை திருடி சென்ற வழக்கில் திருகோயிலூரை சேர்ந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான எல்.இ.டி டி.வி-க்களை பறிமுதல் செய்தனர்புதுச்சேரி- உருளையன்பேட்டை செங்குந்தர் வீதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த மாதம் 28-ம் தேதி  போலி ஆதார் அடையாள அட்டை கொடுத்து அறை எடுத்து தங்கிய நபர் அங்கிருந்த எல்.இ.டி டி.வி-யை திருடி சென்றார்.இதுகுறித்து விடுதி காப்பாளர் அளித்த புகாரின் பேரில் உருளயன்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது திருக்கோயிலூரை சேர்ந்த விக்னேஸ்வரன் (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் கடன் பிரச்சனையால், போலி ஆதார் அட்டை கொடுத்து புதுச்சேரி தமிழக பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனையடுத்து, விக்னேஸ்வரனை கைது செய்த போலீசார்,அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான எல்.இ.டி டி.வி-களை பறிமுதல் செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.தங்கும் விடுதியில் நூதன முறையில் எல்.இ.டி டி.வி திருட்டு: இளைஞரை கைது செய்த புதுச்சேரி போலீஸ்!#Puducherry pic.twitter.com/T0IT9hQl36

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version