உலகம்
பிரேசிலில் சோகம்!
பிரேசிலில் சோகம்!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் இந்நாட்டின் சாவ் பாலோ என்ற நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணம் செய்துள்ளனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென சாலையில் மோதியது.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.[ஒ]