இந்தியா

மீனவர்கள் படுகொலை, இந்தியர்கள் நாடு கடத்தல்: புதுச்சேரியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

Published

on

மீனவர்கள் படுகொலை, இந்தியர்கள் நாடு கடத்தல்: புதுச்சேரியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி, இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் இன்று நடைபெற்றது . இலங்கை கடற்படையால் காரைக்காலைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, படகுகள் கைப்பற்றப்படுவதைத் தடுக்கத் தவறிய மத்திய பா.ஜ.க மோடி அரசின் கையாலாகத்தனத்தைக் கண்டித்தும், இது குறித்து வாய்திறக்காத புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அரசைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் இன்று நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க அரசு தாக்கல் செய்த 2024-25 பட்ஜெட், நாட்டின் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் எவ்வித பயனும் அளிக்காத, இளைஞர்கள் நலனுக்காக வேலைவாய்ப்பை அதிகரிக்கும் எவ்வித அறிவிப்பும் இல்லாத பட்ஜெட்டாக, மக்கள் விரோத, குறிப்பாக இளைஞர்கள் விரோத பட்ஜெட்டாக உள்ளதைக் கண்டித்தனர். சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கை என்கிற பெயரில் அமெரிக்கா இந்தியர்களை, மனித மாண்புகளை புறந்தள்ளி கை,கால் விலங்கிட்டு  இழிவும், கொடுமையும் படுத்தி நாடு கடத்தப்படுவதைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. மேலும், இச்செயலுக்கு எதிராகக் குரலெழுப்பத் தவறிய மத்திய பா.ஜ.க மோடி அரசைக்  கண்டித்தனர். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version