இலங்கை

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் மர்ம பொதிகள்

Published

on

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் மர்ம பொதிகள்

காலி சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகள் வீசப்படுவது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில், சிறை வளாகத்திற்குள் கையடக்கதொலைபேசிகள், சிம் கார்டுகள் மற்றும் சிகரெட்டுகள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகள் வீசப்படுகின்றன.

Advertisement

இதிலும் பெரும்பாலான பொதிகள் காலி ரயில் நிலையத்திலிருந்து சிறை வளாகத்திற்குள் வீசப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தடைசெய்யப்பட்ட சுமார் 25 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version