பொழுதுபோக்கு

தோழியுடன் யானை சவாரி: இலங்கையில் எதிர்நீச்சல் நடிகை வைரல் க்ளிக்ஸ்!

Published

on

தோழியுடன் யானை சவாரி: இலங்கையில் எதிர்நீச்சல் நடிகை வைரல் க்ளிக்ஸ்!

நடிகை மதுமிதா.எச். கர்நாடகாவில் பிறந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஷானி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.புட்டமல்லி, ஜெய் ஹனுமான் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த மதுமிதா, ஜீ தமிழின் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.இந்த சீரியலில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிரியாத வரம் வேண்டும் சீரியல் 2020-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், நம்பர் ஒன் காடலு என்ற தெலுங்கு சீரியலில் நடித்து வந்தார்.இந்த சீரியல் 2022-ம் ஆண்டு நிறைவடைந்தது. அதன்பிறகு சன்டிவியில் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார்.தற்போது எதிர்நீச்சல் சீரியலி் சீசன் 2 ஒளிபரப்பாகி வரும் நிலையில், மதுமிதா நடித்து வந்த ஜனனி கேரக்டரில் தற்போது வோறாரு நடிகை நடித்து வருகிறார்.எதிர்நீச்சல் சீரியலை தொடர்ந்து மதுமிதா தற்போது விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மதுமிதா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இலங்கையில் தனது தோழியுடன் யானை சவாரி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version