இலங்கை

யாழ். மாவட்டச் செயலக பிரதம கணக்காளராக திரு. செ. கிருபாகரன் கடமையேற்பு!

Published

on

யாழ். மாவட்டச் செயலக பிரதம கணக்காளராக திரு. செ. கிருபாகரன் கடமையேற்பு!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளராக திரு. செ. கிருபாகரன் அவர்கள் இன்றையதினம் (11.02.2025) அரசாங்க அதிபர் முன்னிலையில் பிரதம கணக்காளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

Advertisement

பிரதம கணக்காளராக கடமையேற்ற திரு செ. கிருபாகரன் அவர்கள் முன்னர் இலங்கை புகையிரத திணைக்களத்தில் பிரதம கணக்காளராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version