உலகம்

பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!

Published

on

பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!

மேற்கு – மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதன் அண்டை நாடான ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்களால் உள்நாட்டில் கலவரம் வெடித்துள்ளது. காங்கோவில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் ஒன்றான எம்23 படையின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டின் இராணுவம் ஈடுபட்டுள்ளது.

இதனால் எம்23 கிளர்ச்சியாளர்கள் படைக்கும் ராணுவத்திற்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கோவில் உள்ள முக்கிய நகர்களில் ஒன்றான கோமா நகரில் கடந்த வாரம் நுழைந்த எம்23 கிளர்ச்சிப்படை வன்முறையில் ஈடுபட்டது. ராணுவத்திற்கும் கிளர்ச்சிப்படைக்கும் இடையே நடந்த மோதலில் இறுதியாக கோமா நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இந்த பதற்றமான சூழலை பயன்படுத்தி கோமா நகரில் பெண்கள் மீது கொடூர தாக்கதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கோமா நகரில் சுமார் இதுவரை சுமார் 3,000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்றும் அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரித்தும் கொடூரமான முறையிலும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ஐ.நா. தூதரகத்தின் துணைத் தலைவர் விவியன் வான் டி பெர்ரே சமீபத்திய நாட்களில் கோமா தெருக்களில் இருந்து இதுவரை 2,000 உடல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் மேலும் 900 உடல்கள் கோமா மருத்துவமனைகளின் பிணவறைகளில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சில பகுதிகளில் அழுகிய நிலையில் இன்னும் பல உடல்கள் இருப்பதாகவும் அவர்தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை முதல் அங்கு வன்முறை கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து தெருக்களில் சிதறிக் கிடக்கும் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் தெற்கு கிவு மாகாணத்தில் கடுமையான சண்டைகள் தொடர்ந்து பதிவாகியுள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நாடான காங்கோ, நிலம் மற்றும் கனிம வளங்களை பெறுவது தொடர்பான இனப் பதட்டங்கள் மற்றும் சண்டைகளால் பல ஆண்டுகளாக வன்முறையை அனுபவித்து வருகிறது. இது உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்று என உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version