உலகம்
ஆற்றில் விடப்பட்ட 5 ஆயிரம் ஆமைகள்!
ஆற்றில் விடப்பட்ட 5 ஆயிரம் ஆமைகள்!
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டிராஜாகாஸ் (tracajas)என அழைக்கப்படும் மஞ்சள் புள்ளி ஆமைகள் அருகி வரும் உயிரினமாக உள்ளது.
குறிப்பாக கடற்கரையில் அவையிடும் முட்டையை மற்ற விலங்குகள், பறவை உள்ளிட்ட உயிரினங்கள் நாசப்படுத்தி விடுகின்றன. எனவே அதனை பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தவகையில் அங்குள்ள இகாபோ ஆசு Igapo -Acu River ஆற்றங்கரையோரம் சுமார் 5 ஆயிரம் டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் சுற்றித்திரிந்த நிலையில்,
அவற்றை வனத்துறை பொலிசார் மீட்டு ஆற்றில் விட்டுள்ளனர்.
வனத்துறை பொலிசாரின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.