இலங்கை

தமிழ் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Published

on

தமிழ் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

கடந்த 19 நாட்களாக காணாமல்போயுள்ள பெண் ஒருவரை கண்டுபிடிக்க பெலியத்தை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

48 வயதுடைய பெண் ஒருவர் ஜனவரி மாதம் 26 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக பெலியத்தை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

Advertisement

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள பெண்ணின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பெலியத்தை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591497 அல்லது 047 – 2243222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version