இந்தியா

அதிகாலை பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published

on

அதிகாலை பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்திய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் நான்காகப் பதிவான இந்த நடுக்கம் டெல்லி நேரப்படி அதிகாலை 5:36 மணியளவில் 5 கிலோமீற்றர் ஆழத்தில் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது.

Advertisement

டெல்லி, நொய்டா, குருகிராம் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம், 28.59 வடக்கு அட்சரேகையிலும், 77.16 கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்திற்கு பதிலளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி; டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்கிறோம், பின்விளைவுகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version