இந்தியா

முச்சக்கர வண்டி – பேருந்து விபத்து….மூன்று பெண்கள் உயிரிழப்பு!

Published

on

முச்சக்கர வண்டி – பேருந்து விபத்து….மூன்று பெண்கள் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நீருகொண்டா கிராமத்தில் வயலில் வேலை செய்வதற்காக ஆட்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியின் மீது அம் மாநில அரச பேருந்து மோதியுள்ளது. இவ் விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Advertisement

உயிரிழந்த மூவரும் சுத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பில் செப்ரோலு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version