உலகம்

இஸ்ரேலிய, பாலஸ்தீன கைதிகளை ஒரே நேரத்தில் பரிமாற்றிக்கொள்ள ஹமாஸ் பரிந்துரை!

Published

on

இஸ்ரேலிய, பாலஸ்தீன கைதிகளை ஒரே நேரத்தில் பரிமாற்றிக்கொள்ள ஹமாஸ் பரிந்துரை!

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தின் போது, அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் பாலஸ்தீன கைதிகளையும் ஒரே நேரத்தில் பரிமாற்றிக் கொள்வதற்கு ஹமாஸ் பரிந்துரைத்துள்ளது. 

போர் நிறுத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதையும் இஸ்ரேலியர்களை முழுமையாக வெளியேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு ஹமாஸ் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Advertisement

அதேநேரம், சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ள 6 பணயக் கைதிகளையும் விடுவிப்பதனை பாலஸ்தீன குழுவான ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது. 

இதனிடையே, காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் இந்த வாரம் அமுலாகும் என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சார் (Gideon Saar) தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version