இந்தியா

கும்பமேளாவில் சம்பாதிக்கும் கல்லூரி மாணவர்கள்!

Published

on

கும்பமேளாவில் சம்பாதிக்கும் கல்லூரி மாணவர்கள்!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள தினமும் அதிக அளவில் பக்தர்கள் வருவதால், நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில், விமானம் மற்றும் பஸ்களில் வரும் பக்தர்கள் திரிவேணி சங்கமத்துக்கு மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது. பலர் வெகு தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது.

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட உள்ளூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், தங்களது இருசக்கர வாகனத்தில் பக்தர்களை திரிவேணி சங்கமம் பகுதிக்கு அழைத்து சென்று, மீண்டும் கொண்டுவந்து விடுகிறார்கள். இதற்காக ரூ.100 முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கிறார்கள் என்றும். இதன் மூலம் அவர்கள் தினமும் ரூ.5 ஆயிரம் வரை சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

பக்தர்களும் இந்த சேவை தங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version