உலகம்

சொக்லேட் திருட்டினால் உயிரிழந்த சிறுமி!

Published

on

சொக்லேட் திருட்டினால் உயிரிழந்த சிறுமி!

வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைதான சம்பவமொன்று பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த தம்பதியினரின் வீட்டில் சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

சொக்லேட் இனிப்பை திருடி சாப்பிட்ட குற்றத்திற்காக சிறுமி வீட்டு உரிமையாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதற்கமைய உடலில் அதிக காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Advertisement

சிறுமி சித்திரவதைக்கு உட்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த விடயம் பாகிஸ்தானின் ராவல்பின்டி பகுதியில் தீயாக பரவியது.

இதனையடுத்து சிறுமிக்கு நீதி கோரி பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். சிகிச்சைப் பெற்று வந்த சிறுமி சுயநினைவை இழந்ததையடுத்து உயிரிழந்துள்ளார்.

8 வயதிலிருந்தே குறித்த சிறுமி வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். 45 வயதான அவரது தந்தை ஒரு விவசாயி. பொருளாதாரச் சுமை மற்றும் கடன் சுமை காரணமாக சிறுமியை வீட்டு வேலைக்கு அனுப்பும் கட்டாயம் தந்தைக்கு ஏற்ப்பட்டுள்ளது.

Advertisement

கைதான தம்பதியினரின் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். தம்பதியினருக்கு 8 பிள்ளைகள் உள்ளனர். மாதாந்தம் 23 பாகிஸ்தான் ரூபா அதாவது 28 டொலரே ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version