இந்தியா

மகா கும்பமேளாவில் நீராட சென்ற பெண்கள் மாயம்!

Published

on

மகா கும்பமேளாவில் நீராட சென்ற பெண்கள் மாயம்!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மகா கும்பமேளா நிகழ்விற்கு உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து திரிவேணிசங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 

இதுவரையில் சுமார் 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணிசங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். 

Advertisement

இந்நிலையில், தென்காசி பகுதியில் இருந்த 40 பேர் கொண்ட குழு ஒன்று தொடருந்து மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மகா கும்பமேளா நிகழ்விற்கு வருகை தந்துள்ளனர். 

இந்த குழுவினரில் கும்பமேளாவில் நீராடி விட்டு அயோத்திக்குச் சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மகா கும்பமேளா சென்ற தமிழக பெண்கள் காணாமல் போனது தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version