இந்தியா

ரயில் இயந்திர சாரதிகள் இளநீர் குடிக்க கூடாது!

Published

on

ரயில் இயந்திர சாரதிகள் இளநீர் குடிக்க கூடாது!

இந்தியாவில் ரயில் இயந்திர சாரதிகள் இளநீர் உள்பட சில பொருட்களை பணியின்போது சாப்பிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு ரயில் இயந்திர சாரதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ரயில் இயந்திர சாரதிகள் மது அருந்தியுள்ளார்களா என்பதை பரிசோதனை செய்யும்போது, சிலருக்கு ஒரு சில காரணங்களால் ஆல்கஹால் பரிசோதனை கருவிகளில் பாசிட்டிவ் ஆகக் காட்டுகிறது. ஆனால், இரத்த பரிசோதனையில் அவர்கள் மது அருந்தவில்லை என்ற முடிவுகள் வருகின்றன. 

Advertisement

ரயிலின் சாரதிகள் இளநீர், பழங்கள், இருமல் மருந்து, குளிர்பானங்கள் உள்ளிட்டவை எடுத்துக்கொண்டமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ரயில் இயந்திர சாரதிகள் இளநீர், பழங்கள், இருமல் மருந்து, குளிர்பானங்களை பணியின் போது சாப்பிடக்கூடாது என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ரயில் சாரதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version