இலங்கை

உடலைப் பிரகாசமாக்கப் பயன்படுத்தப்படும் வைட்டமின்கள் அடங்கிய பால்பவுடருடன் இருவர் கைது‘!

Published

on

உடலைப் பிரகாசமாக்கப் பயன்படுத்தப்படும் வைட்டமின்கள் அடங்கிய பால்பவுடருடன் இருவர் கைது‘!

உடலைப் பிரகாசமாக்கப் பயன்படுத்தப்படும் வைட்டமின்கள் அடங்கிய 179 டின் பால் பவுடருடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த பால் பவுடர்கள்  1.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ளதாகும்.

Advertisement

 சந்தேக நபர்களில் ஒருவர் நீர்கொழும்பை வசிப்பவர் என்றும், மற்றவர் கொழும்பு, கொட்டாஞ்சேனையை வசிப்பவர் என்றும் தெரியவந்துள்ளது. 

 இன்று (05.03) காலை மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

தேசிய மருந்துகள் அதிகாரசபையின் ஒப்புதல் இல்லாமல் பால்மா கையிருப்பு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

 கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version