இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பயணி!

Published

on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பயணி!

 கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வந்த பயணியால் விமானநிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து குஷ் போதைப்பொருளுடன் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சந்தேக நபர் இன்று அதிகாலை 01.00 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து வருகைத்தந்துள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் நிறை சுமார் 05 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான நபர் தனது பயணப்பொதியில் இருந்த உணவுப் பைகளில் போதைப்பொருளை மறைத்து வைத்துள்ளார்.

Advertisement

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version