இலங்கை

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வெளியான நற்செய்தி

Published

on

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வெளியான நற்செய்தி

போக்குவரத்துப் பிரிவுகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும்  வெகுமதிகளை அதிகரிக்க இலங்கை பொலிஸ் திணைக்களம்  நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, 01.02.2025 முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் வெகுமதித் தொகையை 25% அதிகரிக்குமாறு, பொலிஸ் உயரதிகாரிகளுக்கு  சுற்றறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

Advertisement

இங்கு, களப் பணிகளில் ஈடுபடும் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள், கள மற்றும் அலுவலகப் பணிகளில் ஈடுபடும் ஆய்வாளர் நிலை அதிகாரிகள், பொலிஸ் சார்ஜென்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் களப் பணிகளில் ஈடுபடும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு குறித்த வெகுமதித் தொகை வழங்கப்படவுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version