இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை; சந்தேக நபர்களுக்கான விளக்மறியல் நீடிப்பு!

Published

on

கணேமுல்ல சஞ்சீவ கொலை; சந்தேக நபர்களுக்கான விளக்மறியல் நீடிப்பு!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள்  காணொளி அழைப்பு ஊடாக கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேவேளை, சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரும் போது ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கவனத்தில் கொண்டே காணொளி அழைப்பு ஊடாக கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கு இன்றைய தினம் விசாரணைக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version