உலகம்
சுற்றுலாவுக்கு மீண்டும் தடை!
சுற்றுலாவுக்கு மீண்டும் தடை!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமது நாட்டிற்குள் வருவதற்கு வடகொரியா மீண்டும் தடை விதித்துள்ளது. ஐந்து வருடங்களின் பின்னர் முதற்தடவையாக மேற்குல நாடுகளின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அண்மையில் வடகொரியாவை பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கொவிட் தொற்று ஏற்ப்பட்ட காலத்தில் வெளிநாட்டவர்கள் தமது நாட்டிற்குள் வருவதற்கு வடகொரியா தடை விதித்திருந்தது. 2023ம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த தடைகள் தளர்த்தப்பட்டன.
2024ம் ஆண்டு ரஷ்ய பயணிகள் தமது நாட்டிற்குள் வருவதற்கு வடகொரியா அனுமதித்தது. எனினும் கடந்த மாதம் மேற்குலக நாடுகளின் வெளிநாட்டு சுற்றுலாப் பயிணகள் நாட்டின் கிழடக்கு பகுதிக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.
எவ்வாறெனினும் வடகொரியாவிற்கான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல சுற்றுலா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மறு அறிவித்தல் வரை வடகொரியா இந்த தடையை அமுல்படுத்தியுள்ளது. எனினும் இந்த திடீர் தடைக்கான காரணத்தை வடகொரியா தெரிவிக்கவில்லை.