இலங்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அஞ்சலிக்க ஏற்பாடுகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அஞ்சலிக்க ஏற்பாடுகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அஞ்சலிப்பதற்கு தாயகத்திலும், புலத்திலும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
‘மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்’ என்ற அமைப்பொன்று புலம்பெயர் தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் ஊடாகவே இந்த அஞ்சலிப்பு நிகழ்வை நடத்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் பிரபாகரனுக்கான அஞ்சலி நிகழ்வுகளை தாயகத்திலும் புலத்திலும் சமநேரத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைவர் தொடர்பான பல்வேறு விவாதங்கள் அண்மைக்காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே, தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை உணர்வெழுச்சியுடன் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஊடகச் சந்திப்பையும் அவர்கள் இணையவழியில் நடத்தியதுடன், சிறப்பு ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.