இலங்கை

தாதியர்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் விசேட உத்தரவு!

Published

on

தாதியர்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் விசேட உத்தரவு!

தாதியர் சேவையில் பல தரங்களைச் சேர்ந்த தாதியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதை கட்டாயமாக்குவதற்கு முந்தைய அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் அமுல்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை அமுல்படுத்துவதை நிறுத்தி வைத்து, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது. 

மேற்படி மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்ய அனுமதி வழங்கி நீதிபதிகள் பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு நேற்று  இந்த   உத்தரவை பிறப்பித்துள்ளது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version