இலங்கை

மகாவலி கங்கையில் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

Published

on

மகாவலி கங்கையில் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகாவலி கங்கைக்கு அருகில்  நேற்று  (07) மாலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

45 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன்,  சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

சடலமானது கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

கட்டுகஸ்தோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version